Deprecated: Array and string offset access syntax with curly braces is deprecated in /home4/devan1ay/public_html/sites/all/modules/entity_translation/includes/translation.handler.inc on line 1685
1873 ஆம் வருடம் ஸ்ரீசவுடேஸ்வரியம்மன் திருவிழா சாசனம் | Devangaworld

 
88929 25504
 
  • Total Visitors: 3745139
  • Unique Visitors: 308130
  • Registered Users: 35949

Error message

  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Deprecated function: implode(): Passing glue string after array is deprecated. Swap the parameters in drupal_get_feeds() (line 394 of /home4/devan1ay/public_html/includes/common.inc).

1873 ஆம் வருடம் ஸ்ரீசவுடேஸ்வரியம்மன் திருவிழா சாசனம்

1873 ஆம் வருடம் ஸ்ரீசவுடேஸ்வரியம்மன் திருவிழா:-

                  சுரங்க தேவ மகரிஷி கோத்திரம் ஏந்தேலார் குலம் மடமனை ஸ்ரீசவுடேஸ்வரியம்மன் திருவிழா நடத்தியது பற்றிய விபரம் எழுதி வைத்த சாசனம். 

                  சுப நமஸ்து கலியுக சகாப்தம் 4974 சாலிவாகன சகாப்தம் 1795 ஆங்கில வருடம் 1873 பசலி 1282 கொல்லம் வருடம் 1048 க்கு செல்லானின்ற தமிழ் ஆங்கில வருடம் தை மாதம் 5 ம் தேதி எழுதி வைத்த சாசனம். 

                  கோவை மாவட்டம் வாரக்காடு வதம்பச்சேரியில் பத்தாயிரம் குலம், ஏழுநூறு கோத்திரம், தேவாங்க சூர்யவம்சம், சத்திய தர்மம், முனீஸ்வரர் கோத்திரம், ராமலிங்க சவுடேஸ்வரி தியான மந்திரமே சடாகஷரம், ரிஷி ஆச்சிரிமம் ருக்வேதம், ஆஸ்வலாயன சூஸ்திரம் வர்ணாசுப நமஸ்து.

                 இதில் சுரங்கதேவ மகரிஷி கோத்திரம் ஏந்தேலார் குல வம்சத்தில் அண்ணன் தம்பிகள் ஏழு முதன்மைக்காரரும் ஒரு மனதுடன் மடமனை சாமி கும்பிட வேண்டுமென்று யோசித்து எங்களில் 1.பெரிய மடமனை பூசாரி முதி செட்டியார், 2. பெரியவீட்டு சுப்பி செட்டியார், 3. வதம்பச்சேரி கக்கன் செட்டியார், 4. நல்லூர் பாளையம் பூசாரி காரியஞ் செட்டியார், 5. வெள்ளலூர் பூசாரி அண்ணாமலை செட்டியார், 6.வதம்பச்சேரி பூசாரி முத்துசாமி செட்டியார், 7. வதம்பச்சேரி பூசாரி வத்தஞ் செட்டியார் ஆகிய இந்த ஏழு பேரும் அண்ணன் தம்பிகளும் ஒன்று சேர்ந்து உள்ளூர் ஜாதியாரை அழைத்து  மரியாதை கொடுத்து உட்காரச் சொல்லி, " நாங்கள் அனைவரும் பத்தாயிரம் குலத்தாரையும் வணங்கி கேட்டுக் கொள்வது என்னவென்றால் மகாமேருவுக்குச் சரிசமமான பெரியோர்களே! நாங்கள் தங்களை வரவழைத்த காரணம் எங்கள்;  அண்ணன் தம்பிகள் அனைவரும் மடமனைசாமி கும்பிடுகிற முறை எப்படி?  என்று கேட்பதற்காக அழைத்தோம். ஆகையால் சாமி கும்பிடுகின்ற முறையை தாங்கள் தெரியப்படுத்த வேண்டுமென்று" கேட்டதற்கு அங்கு வந்திருந்த அனைவரும் சொன்னது, "நல்ல மகிழ்ச்சி தான். நீங்கள் சாமி கும்பிடுவதை நினைத்து நீங்கள் திருவுளத்தில் உத்திரவு கிடைத்த பின்பு சாமி கும்பிட்டால் மிகவும் சுகம் கிடைக்கும்" என்று சொன்னார்கள்.  " திருவுளம் கேட்கின்ற முறை எப்படி? என்று கேட்டதற்கு, ஜாதியாச்சாரப்படி தலைவாசலில் விரிப்பு போட்டு உள்ளூர் உறவின்முறையாரையும் ஜாதியாரையும் அண்ணன் தம்பிகளும் கூட்டம் கூடச் செய்து, அவர்களிடத்தில் சாமி கும்பிடுவதற்கு திருவுளம் கேட்பது என்கின்ற விபரத்தைச் சொன்னால் அவர்கள் சொல்வார்கள்.  ஆகையால் நீங்கள் அவர்களுடைய உத்திரவுப்படி சாமி கும்பிட்டால் உங்கள் குலகோத்திரம் உத்திர கோத்திரமாய் வாழ்வீர்கள்!" என்று சொன்னார்கள் அதன்படி நாங்கள் ஒப்புக்கொண்டோம். 

               அணிக்கடவு மடமனை ஒக்கிலிபாளையம், செவ்வேலாரு மடமனையும், வடவள்ளி லத்தேகாரர் மடமனையும், உள்ளூர் ஜாதியாரையும் அழைத்துக் கூட்டம் கூட்டி குருவி ஓட்டம் பார்த்ததில் சாமி கும்பிடவும்,குண்டம் நடப்பதற்கும் நல்ல உத்தரவு கிடைத்தது.  சின்னஞ்சிறுவர்களாக இருப்பதால் குண்டம் நடப்பது எப்படி?  என்று தயங்கினோம். அதற்குத் தக்க தைரியம் சொன்னவர்,  பருவாயிலிருந்து வதம்பச்சேரிக்கு வந்திருந்த செவ்வேலார் குலத்தைச் சேர்ந்த காஜி செட்டியார் என்பவர்,"நான் முன்பு குண்டம் நடத்தியிருக்கிறேன் ஆகவே இப்போது நான் முதலில் குண்டம் நடக்கிறேன்.  நீங்கள் பயப்பட வேண்டாம்" என்று தைரியம்  சொன்னார்.  நாங்கள் அனைவரும் நல்லது என்று சம்மதித்து ஆங்கிரஷ வருஷம் மார்கழி மாதம் 14 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்தது.  மார்கழி மாதம் 17 ஆம் தேதி உள்ளூர் ஜாதியாரும், மடமனையாரும் அறுபது வீட்டு அண்ணன் தம்பிகளும், பூசாரி அருணாசலம் செட்டியாரும், பெரிய தனக்காரர் அருணாசலஞ் செட்டியாரும், சேர்ந்து சந்தோஷமாய் முதலில் கன்னிப் புத்துக்கு கங்கணம் கட்டி, புத்துமண் கொண்டு வந்து மடமனையில் கத்திகை மேடையின் மீது போட்டு மடமனைக்குப் பண்டாரம் கட்டின விபரம் அன்றைய தினத்தில் அண்ணன் தம்பிகள்,பெண்டு பிள்ளைகள் அனைவரும் சுத்தமான நீரில் குளித்து, செய்த தவறுகளுக்குத் தக்க காணிக்கை வாங்கி, விபூதி ஜாதி ஆச்சாரப்படி வைத்து மடமனை சாமியையும்,ஜாதியார் சாமியையும் கெங்கைக்குக் கொண்டு போய் சுத்த நீராட்டி இரண்டு சப்பரத்திலும் சுவாமிகளையும் வைத்து சகல மேள வாத்தியத்துடன் மடமனைக்கு வந்து இரண்டு அம்மனையும் கத்திகை மேடையின் மீது வைத்து பூஜை செய்து பொங்கல் பூசையான பின்பு  தீர்த்தம், பிரசாதம் கொடுத்து விட்டு ஐந்து மஞ்சள் வஸ்திரம் எடுத்து அதில் விபூதியும், பத்திரியும் வைத்து தனித்தனியாக முடிந்து 1.பொன்குலுக்கிக் காடு பூளவாடி கப்பலேர் மடமனைக்கு ஒன்றும்,
2.மானூர் பாளையம் மாலிலார் குல மடமனைக்கு ஒன்றும்,
3. அணிக்கடவுலத்திகாரர் மடமனைக்கு ஒன்றும்
4.ஆலாம்பாளையம் செவ்வலேர் மடமனைக்கு ஒன்றும்
5.வடபள்ளி லத்திகார் மடமனைக்கு ஒன்றும்,
இதன்படி ஐந்து மடமனைக்கும் வதம்பச்சேரி ஏந்தேலார் குல மடமனைக்காரர் மடமனை தெய்வம் கும்பிட இவர்கள் மடமனைக்குப் பண்டாரங் கட்டியழைக்க,ஜாதியாரில் ஒருவரும் அண்ணன் தம்பிகளில் ஒருவரும் இந்த இரண்டு பேரும் அச்சமில்லாமல் கொண்டு போய் கொடுத்து வந்தார்கள்.  மறுநாள் காலையே குண்டத்திற்கு எரிகரும்பு வேண்டுமென்று ஜாதியாரைக் கேட்டதில், அவர்கள் ஒரு பெரிய புளிய மரம் கொடுத்தார்கள். ஜாதியாரும் மடமனையாரும் புளியமரத்துக்குக் காப்புக் கட்டி மரத்தை வெட்டிப் பிளந்து ஒப்பனை செய்தது வந்திருந்த மடமனையார்.  மார்கழி மாதம் 17ம் தேதி முதல் இரண்டாம் மனையும், 15 தினம் கொலுவு செய்து தை மாதம் 5 ஆம்  தேதி வியாழக் கிழமை பெரிய பண்டிகை என்று முடிவு செய்து கொண்டு அந்தத் தேதியில் வந்த மடமனை அணிக்கடவு மடமனை, ஆலாம்பாளையம் மடமனை, வடவள்ளி மடமனை, பூளவாடி மடமனை, உடுமலைப் பேட்டை தாலுகா குரலுக்குட்டை கிராமம், மலையாண்டி பட்டிணம் தேவாங்கர் குலகுரு பண்டிதாத்திரி ஏகோராமைய்ய  மழை பெய்ய மடாதிபதியாகிய சிவகுரு சுவாமியார், மேலே குறிப்பிட்ட மடமனையார் இவர்களின் முன்னிலையில் சாமி கும்பிட்ட விபரம்:

                     ஊர் தலைவாசலில் கரும்பினால் பந்தல் போட்டு ஜாதியாருடைய அம்மனையும், மடமனையாருடைய தெய்வத்தையும், நம்முடைய தெய்வத்தையும்  தலைவாசலில் கட்டப்பட்ட சப்பரத்தில் வைத்து பூஜை நைவேத்தியம் செய்து, மூன்று நாள் வரையிலும் மானூர் பாளையம் மடமனையாரை அழைத்து குண்டம் வளர்க்கச் சொன்னார்கள்.அவ்வூர் கானியானக் கவுண்டர் கிருஷ்ணசாமி அவர்களை அழைத்து  அவர்களிடத்தில் பூமி வாங்கி, குண்டம் வெட்டி மாலேலார் குலத்தார் குண்டம் வளர்த்தார்கள். அந்த குண்டம் யாதொரு குற்றமில்லாமல் பரமானந்த பரமசுகமாய் மகாமேரு கிரிபருவத்திற்குச் சமமாக உள்ளிதமாய் வளர்ந்தது.  அந்த குண்டத்திற்கு ஆராதனை பூஜைக்குக் கேட்ட பொருள்களை எல்லாம் கொடுத்தோம். பூஜை நடந்தது.பின்பு எல்லா சுவாமிகளுக்கும் பூஜை செய்து குண்டத்திற்கும் பூஜை செய்து குண்டத்தில் நடந்து போனார்கள். 

குண்டத்தில் நடந்தவர்கள்:

1. பெரிய பூசாரி அருணாசலம் செட்டியார்,
2.அவர் தம் மனைவியார்,
3. பெரிய வீட்டுக்காரர் சுப்பி செட்டியார், 4
4. அவர் தம் மனைவியார்,
5. த.சிக்கண்ண செட்டியார்,
6. கருவேலங்காடு சிக்கண்ண செட்டியார்,
7. வேலாரம்பாளையம் கரியஞ் செட்டியார். 
8.வடவள்ளி புதூர் உச்சி செட்டியார்,
9. அன்னியூர் சவுண்டப்ப செட்டியார்,
10.கட்டியக்கார சுப்பு செட்டியார்,
11. குண்டத்து வீரன் அண்ணாமலை செட்டியார்,
12. சுப்பு செட்டியார் மனைவியார்,
13. பெரியதனம் சவுண்டப்ப செட்டியார்,
14. சாமாஜி உ.மு.திருமலை செட்டியார்,
15. ஜாதி பிள்ளை  பொன்னி என்பவர் தன் மகனை இடுப்பில் வைத்து கொண்டு யாதொரு குற்றமில்லாமல் பதினைந்து பேரும் ஒழுக்கமாக குண்டத்தில் யாதொரு கஷ்டமில்லாமல் நடந்து வந்தார்கள்.  குண்டத்தில் நடந்து வந்தவர்களுக்கு பாணக்கம், பால், தயிர் முதலியன கொடுத்து தாகத்தை தீர்த்து சுகமாய் இருந்தார்கள்.
                                                                                                    சுபம்

                     அவரவர் உறவின் முறையார்கள் வேஷ்டி , சீலை, சீர்வரிசை செய்தார்கள். சகல ஜனங்களுக்கும் சந்தோஷமாக இருந்தது.  மறுபடி சாமிகளுக்கு பூஜை செய்து தீர்த்தம் திருநீர் வழங்கப்பட்டது.  மடமனையாருக்கு துப்பட்டி, சால்வை, வரிசை செய்தார்கள்.  பின்பு எங்கள் அண்ணன் தம்பிகள் அனைவரும் ஜாதியாருக்கும், மடமனையாருக்கும் உறவின்முறையார்களுக்கும், சுவாமிகளுக்கும் தீர்க்க தண்டமாய் நமஸ்காரம் செய்து அவரவர்கள் சுவாமியை அவரவர் இருப்பிடத்திற்கு அனுப்பி வைத்தார்கள்.  அதன் பிறகு, தேவாங்கர் குலம் பத்தாயிரம், கோத்திரம் ஏழு நூறுக்கும் குலகுருவாகிய ஏகோராமைய்ய மனையுய்ய சாமியார் மடாதிபதியாகிய சிவகுரு சுவாமிகளுக்கு உள்ளூர் ஜாதியாரும், மடமனை யாரும் அண்ணன் தம்பிகளும் காணிக்கை, வேஷ்டி, பட்டு, பீதாம்பரம் சோமன்கள் கொடுத்து சகலரும் தீர்த்தண்டமாய் நமஸ்காரம் செய்து விபூதி வாங்கி ஆசீர்வாதம் பெற்றார்கள். அவரவர்களால் வாழ்த்துப் பாடல்களும் வேதோக்த ஆசீர்வாத அனுகும் பாடப் பட்டது. பிற்பாடு குலகுரு சாமியாரை சகலரும் ஆஸ்தானத்திற்கு அனுப்பி வைத்தார்கள்.

                                                                                              சுபம் சுபம்

                  வாழியலங்காரப் பாட்டு அடசீர்களில் நெடிலடிப்பா நாடியே ஜனங்களெல்லாம் நயந்து வந்து ராமலிங்க சவுடாம்பிகையை நாடியே  நல் முகூர்த்தமதில் நல்ல அக்னி குண்டமது நடந்து வந்து கூடியே ஜனங்களும் அலகு சேவையும் செய்து கும்பிட்டனர்.  மங்களகரத்துடன் கூடி நின்றபடியே பூஜை புரிந்தனர்.  பல நூல்கள் கற்று வல்லோராயிருந்த ஏந்தேலார் குலதிலகர் எல்லோரும் சுகசோபனராயிருக்க நல்ல கலியுக சகாப்தம் நாலாயிரத்து தொள்ளாயிரத்தி எழுபத்தி நான்கில் சொல்கின்ற ஆங்கிரச மகரமைந்து தேதியில் சூடாம்பிகையை தொழுது போற்றிட கல்வி கற்ற கவிஞர் சொல் சிவகுருஸ்வாமியாரால் அனைவரும் வாழ்கவே வாழியவே. 

வேதோக்த ஆசீர்வாத அனுகு:

1. பரயாப்த்யா அரும்தராயாய ஸத்வஸ்தோ
   மேதி ராத்ர உத்தம மஹாப்வதி சர்வஸ்யாப்தை

2. ஆயுர்கா அக்நே அனிஸோ ஜுஸானோ
    க்ருதப்ரதி கோக்ருதலோ, நிரோதிக்ருதம் பீத்வா
    மது சருகஸ்யம் பிரவ புத்ரம் பிரட்சதாதிமம்

3. யோவைதாம் ப்ரஹ்மனோ வேதா அமிர்தே
   நாள்ரு தாப்புரிம் தன்மைப்ர ஹம்சப்ரஹமாச்சா
  ஆயு கீர்த்திம் ப்ரஜாம்தது.

4. ராஜாதி ராஜாய ப்ரஸஹ்ய ஸாஹிநே
    நமோவயம் வைஸ்ரவனாய குர்மஹேஸ
    காமே மான்காமகாமாய வஸ்ய ஹயம்
    காமே ஸ்வரோ ஸ்ருஸ்ரவனோ தராது
   குபேராய வைஸ்வரவனாய மஹாராஜாய நம

5. புத்ர காம பதுசாமோ தீர்காயுத வம்ச திணர்க்கம்
   தான்யம் தேஜோ பலம் த்ருதி புஷ்டிம்ச வர்த்ததாம் புத்ரகாமோ பவ.

6. சாம்ராஜ்யம் போஸ்யம் ஸ்வராராஜ்யம் வைராஜ்யம் பாரமேஸ்மய ராஜ்யமயம் பருத்வி ஸமுத்ரபர் யந்தாயா ஏக ராகிழி, சுபம், சுபம், சம்பூர்ணம். தெய்வம் கும்பிட்ட விபரம் சுபநமஸ்வ முற்றும்.

மடமனை தெய்வம் கும்பிட வந்தவர்களிடம் கையெழுத்து வாங்கிய விபரம்:

                     மடமனை தெய்வம் கும்பிட்ட பிறகு வந்திருந்த மடமனையாரிடமும், உறவின் முறையாரிடமும், அண்ணன் தம்பிகளிடமும், உள்ளூர் ஜாதியாரிடமும் அவ்விடமிருந்த சகல ஜனங்களுடைய கையெழுத்து இங்கே குறிக்கப்பட்டது. 

                    தாராபுரம் தளமனை 24 நாட்டுக்கும் செட்டிமை
1) பசுவைய செட்டியார்
2) தளமனை பெரிய தனம் ஊத்துப் பாளையம் தி.செக்கன் செட்டியார்
3) மேற்படியூர் ர.வெங்கிட்டராமன் செட்டியார்
4) நல்லூர்க்கனாடு உடுமலைப்பேட்டை செட்டிமை ஆ.ராமலிங்க செட்டியார்
5) பெரிய தனம் பெ.பூமாலை செட்டியார்
6) பொன் குலுக்கினாடு பூளவாடி செட்டிமை சங்கரப்ப செட்டியார்
7) கப்பலேர் மடமனை பூசாரி சவுண்டப்ப  செட்டியார்
8) ச.குப்பன் செட்டியார்
9) தெ.சப்பி செட்டியார்
10) சா.நாகி செட்டியார்
11) மேற்படியூர் செட்டியார் செந்திருமன் செட்டியார்
12) ச.க.முத்துச்சாமி செட்டியார்
13) கொண்டம் பட்டி நாராயணசாமி செட்டியார்
14) வைத்தியர் கெட்டி செட்டியார்
15) பெரிய மடமனை பூசாரி முத்துச்சாமி செட்டியார்
16) பெரிய வீட்டு பூசாரி சுப்பி செட்டியார்
17) உள்ளூர் பூசாரி கக்கன் செட்டியார்
18) நல்லூர் பாளையம் பூசாரி கரியஞ் செட்டியார்
19) வெள்ளலூர் பூசாரி அண்ணாமலை செட்டியார்
20) உள்ளூர் பூசாரி முத்துச்சாமி செட்டியார்
21) உள்ளூர் பூசாரி வத்தஞ்செட்டியார்
22) தி.பங்காரு செட்டியார்
23) ஒக்கிலிபாளையம் ஜே.சுப்பி செட்டியார்
24) அணிக்கட ர.பூசாரி செட்டியார்
25) மானூர் பாளையம் பூசாரி சந்திரன் செட்டியார்
26) ஆலாந்துறை ம.ராமன் செட்டியார்
27) புளியம்பட்டி வீ.கூளையன் செட்டியார்
28) பெரிய பூசாரி அருணாசலஞ் செட்டியார்
29) தன்னாசி செட்டியார்
30) த.சி.சிக்கஞ்செட்டியார்
31) பெரிய தனக்காரர் சவுண்டி செட்டியார்
32) கடயக்கார சுப்பி செட்டியார்
33) சருவேலாங்காடு ம.சிக்கண்ண செட்டியார்
34) வேலாரம்பாளையம் சரியஞ் செட்டியார்
35) வடவள்ளி புதூர் உச்சி செட்டியார்
36) அன்னூர் ம.சவுண்டி செட்டியார்
37) வீரபாண்டி க.கோமாளி செட்டியார்
38) நெகமம் ம.வீரப்ப செட்டியார்
39) வீரபாண்டி நஞ்சப்ப செட்டியார்
40) வெள்ளலூர் கள்ளி செட்டியார்
41) நொச்சிப் பாளையம் வீ.காமாட்சி செட்டியார்
42) பூவாநல்லூர் க.சொக்கன் செட்டியார்
43) சித்தூர் புதுநகரம் க.ராமலிங்கம் செட்டியார்
44) கல்லஞ்சேரி வீ.குருநாத செட்டியார்
45) கொல்லங்கோடு வீ.சுந்திரம் செட்டியார்
46) வல்வாங்கி க.சவுண்டி செட்டியார்
47) க.முருகப்ப செட்டியார்
48) வேங்கிபாளையம் ம.காமாட்சி செட்டியார்
49) குல்லாயிப்பாளையம் வா.வெங்கிட்டராமன் செட்டியார்
50) வா.குப்பன் செட்டியார்
51) பெருந்துறை வே.குப்பன் செட்டியார்
52) சுப்பேகவுண்டனூர் செட்டிமை வீ.தொண்டான் செட்டியார்
53) அணிக்கடவு சு.இராமன் செட்டியார்
54) நெகமம் தி.காசி செட்டியார்
55) நெகமம் கரியஞ் செட்டியார்
56) பருவாய் காஜி செட்டியார்
57) புளியம்பட்டி ம.காமாட்சி செட்டியார்
58) சூளேஸ்வரம்பட்டி சி. பொம்பி செட்டியார்
59) வெள்ளலூர் ம.கிருஷ்ணசாமி செட்டியார்
60) கு.நாகைய செட்டியார்
61) ரா.வீரண செட்டியார்
62) சொக்கலிங்காபுரம் ம.இராமலிங்கம் செட்டியார்
63) பூராண்டம்பாளையம் சு.சொக்கநாத செட்டியார்
64) தர்மகர்த்தா வீராசாமிக் கவுண்டர்
65) மணியம் முத்துச் சாமி முதலியார்
66) கந்தே கவுண்டன்பாளையம் பெ.கந்தன் செட்டியார்
67) ஔல்டதி வீ.சொக்கன் செட்டியார்
68) கொங்கனாடான் புதூர் கா.முத்தங் செட்டியார்
69) முருங்கபாடி  பொ.நஞ்சப்ப செட்டியார்
70)  பொ.நாராயண செட்டியார்
71) பொ.கிருஷ்ணசாமி செட்டியார்
72) கொண்டப்ப செட்டியார்
73) மு.சிக்கண்ண செட்டியார்
74) மு.சவுண்டி செட்டியார்
75) மு.அருணாசலம் செட்டியார்
76) கோடை மங்கலம் மணியம் கி.சு.ம.கிருஷ்ணசாமி நாயக்கர்
77) அங்கித் தொழுவு நா.நாராயணசாமி செட்டியார்
78) அருப்புக்கோட்டை ம.மு.ம.முந்தி செட்டியார்
79) வரப்பாளையம் க.மோளையன் செட்டியார்
80) வீ.லிங்கி செட்டியார்
81) மு.சிக்கண்ண செட்டி
82) வேண்டனூர் ரா.கந்தசாமி செட்டியார்
83) தண்ணீர் பந்தல் பாளையம் மா.குப்பன் செட்டியார்
84) ஒம்மஞ்செட்டி பாளையம் மு.மல்லி  செட்டியார்
85) ம.மூக்கஞ் செட்டியார்
86) ஏளூர்.சி.திருமன் செட்டியார்
87) கூடலூர் ர.ராமசாமி செட்டியார்
88) அன்னியூர் சு.சவுண்டப்ப செட்டியார்
89) வடுகபாளையம் பெரிய தனம் கந்தசாமி செட்டியார்
90) ந.சுப்பி செட்டியார்
91) செல்லனூர் சு. பழனிச்சாமி செட்டியார்
92) வையாபுரி செட்டியார்
93) குப்பனூர் கோ.மூத்தஞ் செட்டியார்
94) கோயம்புத்தூர் சு.காளி செட்டியார்
95) கி.கிரியஞ் செட்டியார்
96) மு.வெங்கிட்ட ராமன் செட்டியார்
97) மந்திரிபாளையம் மு.சிக்கன் செட்டியார்
98) குறிச்சிக் கோட்டை பெரிய தனம் பெ.சிக்கண்ண செட்டியார்
99) மேற்படியூர் வ.நரசிம்ம செட்டியார்
100) ஆ.சுப்பிரமணிய செட்டியார்
101) செட்டிமை வரத வெங்கட்டராமன் செட்டியார்
102) ம. சுந்திரஞ் செட்டியார்
103) தொட்டியந்துரை பா.சாமிநாதன் செட்டியார்
104) வி.ராமச்சந்திரன் செட்டியார்
105) செட்டிமை க.வேலாயுதச் செட்டியார்
106) குப்பன் பாளையம் கிருஷ்ணசாமி செட்டியார்
107) சு.தெண்டபானி செட்டியார்
108) வி.முத்தஞ் செட்டியார்
109) வீ.முத்துச் சாமி செட்டியார்
110) வாளவாடி பெரிய தனம் ம.மும்மூர்த்தி செட்டியார்
111) தி.தனுஷ்கோடி செட்டியார்
112) ப.முத்து வீரன் செட்டியார்
113) ப.கோபால் செட்டியார்
114) கா.சுப்பி செட்டியார்
115) ம.காமாட்சி செட்டியார்
116) ர.திருவேங்கடஞ் செட்டியார்
117) குளத்துப் பாளையம் வே.ரங்கி செட்டியார்
118) ம.மாரிமுத்து செட்டியார்
119) ஆ.நாகி செட்டியார்
120) கு.ராமசாமி செட்டியார்
121) ஏளூர் சு.இராமனாதன் செட்டியார்
122) வே.ரங்கி செட்டியார்
123) மு.அ.ப.மாரிமுத்து செட்டியார்
124) சூளேஸ்வரம்பட்டி
125) ம.கு.ம.திருமூர்த்தி செட்டியார்
126) போ.திம்தி செட்டியார்
127) பகவதிபாளையம் வே.ரங்கி செட்டியார்
128) மு.அ.பா.மாரிமுத்து செட்டியார்
129) சூளேஸ்வரம் பட்டி சி.சுப்பிரமணியம் செட்டியார்
130) ஆ.முத்துவீரன் செட்டியார்
131) குள்ளக்காபாளையம் காவிளிக் கனாடு செட்டியார்
132) ம.மாரி செட்டியார்
133) மா.மல்லி செட்டியார்
134) ல.ஆண்டி செட்டியார்
135) கு.ந.நஞ்சி செட்டியார்
136) ந.மாரி செட்டியார்
137)) க.பொம்மி செட்டியார்
140) பொ.நஞ்சப்ப செட்டியார்
141) போத்தனூர் செட்டிமை வை.மாரி செட்டியார்
142)  வை.சவுண்டி செட்டியார்
143) பெரிய தனம் சுப்பி செட்டியார்
144) மல்லி செட்டியார்
145) சுங்காரமடக்கு கா.அமராவதி செட்டியார்
146) கா.திருமன் செட்டியார்
147) க.வெள்ளிங்கிரி செட்டியார்
148) மேற்படியூர் மணியம் ரங்கசாமிக் கவுண்டர்
149) வெள்ளலூர் செட்டிமை ம.கணபதி செட்டியார்
150) சு.ராமலிங்கம் செட்டியார்
151) வை.சப்பி செட்டியார்
152) வி.காருண்ய செட்டியார்
153)  வலையன் புதூர் சுப்பி செட்டியார்
154) பே.ச.பெருக்கன் செட்டியார்
155) பருவாய் கூ.குப்பன் செட்டியார்
156) ம.கந்தசாமி செட்டியார்
157) வீ.சுப்பிரமணியம் செட்டியார்
158)  பெரும்பாரைச் சள்ளை வே.ரங்கனாதன் செட்டியார்
159) ர.ரங்கசாமி செட்டியார்
160) வைத்தியர் ராமசாமி செட்டியார்
161) வேளந்தாவளம் செட்டிமை அ.சென்னி செட்டியார்
162) சு.தம்மன்ன செட்டியார்
163) சு.குப்பண்ண செட்டியார்
164) கோவிந்தனூர் செட்டிமை  ராமன் செட்டியார்
165) தி.கிருஷ்ணசாமி செட்டியார்
166) கோவில்பாளையம் வ.தொண்டான் செட்டியார்
167) வ.சுப்பிரமணியம் செட்டியார்
168) சு. குமாரவேலு செட்டியார்
169) வடிவேல் செட்டியார்
170) சத்தியமங்கலம் தாலுக்கா, தொட்டனு பாளையம் கிராமம் மொடக்கந்துரை செட்டிமை கிருஷ்ண செட்டியார்
171) ர.திம்மப்ப செட்டியார்
172) பூ.சென்னி செட்டியார்
173) மா.கோவிந்தப்ப செட்டியார்
174) மதுரை 14 ஊர்த்தாய் கிராம், கொல்லபட்டி ம.சப்ராயன் செட்டியார்
175) வ.லட்சுமின்ன செட்டியார்
176) வே.ஈஸ்வரன் செட்டியார்
177) வே.முத்தஞ்செட்டியார்
178) ம.கிருஷ்ணசாமி செட்டியார்
179) க.மாரி செட்டியார்
180) வே.மீனாட்சி செட்டியார்
181) ர.பொம்மண்ண செட்டியார்
182) புங்க வர்த்தம் சி.ராமலிங்கம் செட்டியார்
183) சி.கிருஷ்ணசாமி செட்டியார்
184) ம.வையாபுரி செட்டியார்
185) வீ.ரங்கி செட்டியார்
186) ராமகிருஷ்ணன் செட்டியார்
187) ப.வெங்கிட்ட கிருஷ்ணன் செட்டியார்
188) ம.வீரி செட்டியார்
189) சு.சுந்திரன் செட்டியார்
190) க.வடிவேலு செட்டியார்
191) தோனுக்கால் ம.தர்மலிங்கம் செட்டியார்
192) ந.சப்பண்ண செட்டியார்
193) மா.க.வையாபுரி செட்டியார்
194) வாணரமுடி கா.ஆண்டி செட்டியார்
197)  ம.பாப்பி செட்டியார்
198) க.வேலப்ப செட்டியார்
199) ர.மாரிமுத்து செட்டியார்
200) வை.சுப்பறாய செட்டியார்
201) ந.வையாபுரி செட்டியார்
202) ராமலிங்கபுரம் பட்டக்காரர் சி. தொட்டி செட்டியார்
203) வை.ராமலிங்கன் செட்டியார்
204) கு.ச.வீரராஜேந்திரன் செட்டியார்
205) கு.ச.வீரமயேந்திர செட்டியார்
206) ந.கு.சி. அதிவீரபாண்டிய செட்டியார்
207) ம.சவுண்டி செட்டியார்
208) இளையரசு ஏந்தல் ம.சண்முகம் செட்டியார்
209) கூ.மாரிமுத்து செட்டியார்
210) வ.லட்சுமண செட்டியார்
211) கூ.காமாட்சி செட்டியார்
212) ம.கள்ளி செட்டியார்
213) கூ.கம்பாறை ர.கொண்டரங்கி செட்டியார்
216) கருணாகரன் செட்டியார்
217) லட்சுமிபுரம் பட்டத்து செட்டிமை கரியஞ்செட்டியார்
218) வா.அருணாசலம் செட்டியார்
219) ர.லட்சுமண செட்டியார்
220) நல்லக்கம்மாள்புரம் ம.வீரஞ் செட்டியார்
221) சுப்பறாய செட்டியார்
222) ம.வடிவேலு செட்டியார்
223) ம.குருநாத செட்டியார்
224) வீ.கந்தசாமி செட்டியார்
225) வே.சொக்கலிங்கம் செட்டியார்
226) சிவலிங்காபுரம் வே.சுப்பி செட்டியார்
227) ம.அனந்தராய செட்டியார்
228) வே.ரங்கசாமி செட்டியார்
229) ம.கந்தசாமி செட்டியார்
230) சு.சுந்தரன் செட்டியார்
231) கீள்கோட்டூர் ப.இராகவசாமி செட்டியார்
232) கு.சுந்தரன் செட்டியார்
233) ர.மாரிமுத்து செட்டியார்
234) வை.சுப்பிரமணி செட்டியார்
235) கணபதிபுரம் என். பெருமாள் செட்டியார்
236) ம.குழந்தைவேல் செட்டியார்
237) சு.சவுண்டி செட்டியார்
238) சு.கருப்பறாய செட்டியார்
239) முக்கூட்டுமலை வீ.காந்தார வீரன் செட்டியார்
240) வீ.சுப்பிரமணி செட்டியார்
241) மேல்கோட்டூர்  சு.அதிவீரபாண்டிய செட்டியார்
242) மா.கோவிந்தசாமி செட்டியார்
243) ம.அருணாசலம் செட்டியார்
244) சு.வையாபுரி செட்டியார்
245) அன்னக்கொடி ராமலிங்காபுரம் ர.சிக்குந்தம்மன்ன செட்டியார்
246) வ.அருணகிரி செட்டியார்
247) சு.சாமிநாதன் செட்டியார்
248) வை.ஆறுமுகம் செட்டியார்
249) தொட்டி கவுண்டன்பட்டி வீ.ராஜேந்திரன் செட்டியார்
250) ந.அ.அரசன் செட்டியார்
251) குவிசேரபட்டி கச்சைகட்டி சங்கரப்ப செட்டியார்
252) பெரியதனம் ம.ராமநாதன் செட்டியார்
253) க.ர.ஆண்டி செட்டியார்
254) ம.சுப்பிரமணியம் செட்டியார்
255) ம.வேலாயுதம் செட்டியார்
256) குவிசம்பட்டி சு.அழகிரி சாமி செட்டியார்
257) சு.வெட்கட்ராமன் செட்டியார்
258) கோயிலாங்குளம் செட்டிமை சுப்புராமன் செட்டியார்
259) ஆண்டி செட்டியார்
260) வை.சப்பி செட்டியார்
261) ந.பெருமாள் செட்டியார்
262) திராவி.சு.ம.சுந்தரன் செட்டியார்
263) ம.சுப்பிரமணியம் செட்டியார்
264) வீ.வீரசாமி செட்டியார்
265) சு.வேலாயுதன் செட்டியார்
266) க.மாரி செட்டியார்
267) சு.கருணாகரன் சாமி செட்டியார்
268) ம.வெங்கிடாசலம் செட்டியார்
269) கல்குறிச்சி செட்டிமை ம.வீரண்ண செட்டியார்
270) ம.லட்சுமன்னசாமி செட்டியார்
271) கு.வீ.ர.ராமசாமி செட்டியார்
274) இலுப்பூர் க.ம.வீரகாத்தி செட்டியார்
275) கு.அமராவதி செட்டியார்
276) வேலுரணி சா.மு.அ.பண்டாரஞ் செட்டியார்
277) கல்குறிச்சி க.சௌந்திர பாண்டிய செட்டியார்
278) குத்தாம்புள்ளி எஜமான் வீரி செட்டியார்
279) மா.ஈஸ்வரன் செட்டியார்
280) சித்தையன் கோட்டை ம.சுப்பி செட்டியார்
281) மோ.சங்கரன் செட்டியார்
282) வெள்ளையன் செட்டியார்
283) பூலக்காம்பட்டி ஆசிரியர் கோ.தி.ராமனாதன் செட்டியார்
284) ம.கந்தசாமி செட்டியார்
285) வீ.ராமசாமி செட்டியார்
286) கலிக்கம்பட்டி நாட்டாமை அருணகிரி செட்டியார்
287) ம.வீரமுத்து செட்டியார்
288) அமரபாண்டி.சு.சவுண்டி செட்டியார்
289) க.வேலாயுதம் செட்டியார்
290) ம.சுந்தரம் செட்டியார்
291) மதுரை பெரியகுளம் தாலுக்கா வடுகபட்டி செட்டிமை ம.வெங்கிடாசலம் செட்டியார்
292) கா.ரங்கசாமி செட்டியார்
293) அ.ம.மாரிமுத்து செட்டியார்
294) சின்னாளபட்டி ச.மொட்டயஞ் செட்டியார்
295) வீ.பண்டாரஞ் செட்டியார்
296) கு.மாரி செட்டியார்
297) முத்துராமபட்டி க.வீரப்ப செட்டியார்
298) வைத்தியர் அண்ணாமலை செட்டியார்
299) செட்டிமை வீரி செட்டியார்
300) அத்திக்கோம்பை ம.ரங்கசாமி செட்டியார்
301) கு.கிருஷ்ணசாமி செட்டியார்
302) மத.கந்தசாமி செட்டியார்
303) வி.குள்ளஞ் செட்டியார்
304) கரூர் தாலூக்கா , மணல்காடு கோடாந்தூர் செட்டிமை எ.சின்னஞ் செட்டியார்
305) பெரியதனம் சி.பொன்னாஞ் செட்டியார்
306) பொ.ம.முத்தஞ் செட்டியார்
307) ஊதியூர் தாயம்பாளையம் வி.ம.க.சி.வடுகஞ் செட்டியார்
308) மு.வரதவேங்க செட்டியார்
309) க.மூர்த்தி செட்டியார்
310) க.சுப்பிரமணியம் செட்டியார்
311) ம.கந்தசாமி செட்டியார்
312) க.சுப்பாராயன் செட்டியார்
313) ரா.முத்துச் சாமி செட்டியார்
314) பல்லடம் தாலுக்கா, கணபதிபாளையம் க.கார்த்திகேயன் செட்டியார்
315) கு.செங்காதரன் செட்டியார்
316) க.காமாட்சி செட்டியார்
317) சு.மதுரை வீரன் செட்டியார்
318) சு.சோமசுந்தரம் செட்டியார்
319) மா.தெண்டாயுதம் செட்டியார்
320) நல்லிபாளையம் ம.அழகிரிசாமி செட்டியார்
321) கு.மல்லி செட்டியார்
322) தி.பா.திருப்பதி செட்டியார்
323) ர.சங்கரன் செட்டியார்
324) வேலப்ப நாயக்கம்பாளையம் ச.குப்பன் செட்டியார்
325) கொ.பொட்டி செட்டியார்
326) பழனி தாலுகா அரசு மரத்துப்பட்டி நாட்டாமை க.கூளையப்ப செட்டியார்
327) க.அண்ணாமலை செட்டியார்
328) கு.சு.முத்தஞ் செட்டியார்
329) த.பரட்டன் செட்டியார்
330) பெரியதனம் ராமஞ் செட்டியார்
331) ம.காமாட்சி செட்டியார்
332) செட்டிமை ம.கொண்டரங்கி செட்டியார்
333) கொடுவாய் பெரியதனம் க.கெச்சன் செட்டியார்
334) க.காமாட்சி செட்டியார்
335) சு.பொம்மி செட்டியார்
336) சு.ராசு செட்டியார்
337) ம.அ.பழனிச் செட்டியார்
338) கணக்கம்பாளையம் ப.அருணாசலம் செட்டியார்
339) க.வடிவேலு செட்டியார்
340) க.பு.சுந்தரசாமி செட்டியார்
341) சேலம் செட்டிமை சென்னராய செட்டியார்
342) புள்ளார்கோவில் வெங்கட்ராமன் செட்டியார்
343) அமரகுந்தி ஏஜெண்டு சென்ன ராஜேந்திர செட்டியார்
346) வ.ஆறுமுகம் செட்டியார்
347) வ.முத்துச் சாமி செட்டியார்
348) சுக்கிரம்பாளையம் வி.உச்சி செட்டியார்
349) வெங்கடாசலம் செட்டியார்
350) சிறுமுகை நா.ராமலிங்கம் செட்டியார்
351) மு.பூமாலை செட்டியார்
352) பகுத்தூர் க.சுப்பிரமணியம் செட்டியார்
353) மதுரை ஜில்லா தாயலுபட்டி பூசாரி மீனாட்சி செட்டியார்
356) செட்டிமை மல்லி செட்டியார்
357) பெரியதனம் பூசாரி செட்டியார்
358) கும்பகோணம் வைத்தியர் அ.ரூ.வெள்ளையன் செட்டியார்
359) கோயம்புத்தூர் வெள்ளக்கிணர் சா.சீரங்க செட்டியார்
360) சீ.சாமிநாதன் செட்டியார்
361) மு.கரியஞ் செட்டியார்
362) சா.மெம்பரு செட்டியார்
363) உள்ளூர் காணியாளர் கிருஷ்ணசாமிக் கவுண்டர்
364) வெள்ளலூர் வைத்தியர் நஞ்சப்ப செட்டியார்
365) சு.குப்பஞ் செட்டியார்
366) வி.மூக்கஞ் செட்டியார்
367) காங்கயம் பொன்னாளி பாளையம் செட்டிமை குப்பஞ் செட்டியார்
368) பெரியதனம் மூத்தஞ் செட்டியார்
369) தி.திம்மி செட்டியார்
370) ம.ஆண்டி செட்டியார்
371) வை.சுப்பி செட்டியார்
372) வை.ராமசாமி செட்டியார்
373) க.குப்புச்சாமி செட்டியார்
374) வெங்கட்டாபுரம் ஆ.ராமச்சந்திரன் செட்டியார்
375) ம.கூளையஞ் செட்டியார்
376) பெ.வையாபுரி செட்டியார்
377) க.மாரி செட்டியார்
378) கோவை பொள்ளாச்சி போலீஸ் ஏட்டு நாராயண ஐய்யர்
379) போலீஸ் ந.சுப்பிரமணிய பிள்ளை
380) நாகராஜு
381) செட்டிமை தலமஞ் செட்டியார்
382) பெரியதனம் சுந்திரம் செட்டியார்
383) க.ஆண்டி செட்டியார்
384) சா.மன்னார் செட்டியார்
385) உடுமலைப்பேட்டை அ.லிங்கி செட்டியார்
386) ம.ராமஞ் செட்டியார்
387) ப.சு.சிக்குத்தம்ம செட்டியார்
388) செ.பெருமாள் செட்டியார்
389) த.சின்னநாகி செட்டியார்
390) க.சுப்பி செட்டியார்
391) க.ரங்கசாமி செட்டியார்
392) குரலு குட்டை சா.கருப்பஞ் செட்டியார்
393) த.மும்மூர்த்தி செட்டியார்
394) வீ.ராமசாமி செட்டியார்
395) சடையஞ் செட்டியார்
396) க.பெருமாள் செட்டியார்
397) ஆசிரியர் குமரவேலு பிள்ளை
398) மலையாண்டிபட்டிணம் பெரியதனம் தி.கோபால் செட்டியார்
399) புரோகிதர் சடையப்ப செட்டியார்
400) க.மா.மும்மூர்த்தி செட்டியார்
401) செட்டிமை சுப்பி செட்டியார்
402) உரல்பட்டி சா.சுந்திரம் செட்டியார்
403) சு.சாமிநாதன் செட்டியார்
404) கு.சி.பண்டாரஞ் செட்டியார்
405) பாப்பன்குளம் க.வீரன் செட்டியார்
406) க.முத்துராமன் செட்டியார்
407) சு.வடிவேலு செட்டியார்
408) உதும்புப்பட்டி செட்டிமை காமாட்சி செட்டியார், பெரிய தனம் லட்சுமண செட்டியார்
409) பூசாரி திருமூர்த்தி செட்டியார்
410) மானுப்பட்டி க.மாரி செட்டியார்
411) வ.ராமசாமி செட்டியார்
414) ம.கந்தசாமி செட்டியார்
415) மணியம் சுந்திரசாமிக் கவுண்டர்
416) கொடிங்கியம் செட்டிமை ஆண்டி செட்டியார்
417) பெரியதனம் வேலுமணி செட்டியார்
418) பு.தி.கந்தசாமி செட்டியார்
419) பூசாரி ராமஞ் செட்டியார்
420) பாப்பனூத்து ஆசிரியர் இராமனாத அய்யர்
421) வாளவாடி மாலைகட்டி சுந்தரசாமி ஐய்யர்
422) க.முத்துவீரன் செட்டியார்
424) கூ.அண்ணாமலை செட்டியார்
425) கவுண்டம்பாளையம் சொ.கந்தசாமி செட்டியார்
426) மு.அருணாச்சலம் செட்டியார்
427) கா.மாரி செட்டியார்
428) க.கிருஷ்ணசாமி செட்டியார்
429) கல்லஞ்சேரி சீரங்க செட்டியார்
430) ம.க.சுப்பி செட்டியார்
431) குத்தாம்புள்ளி கு.குட்டி செட்டியார்
432) க.திம்மி செட்டியார்
433) க.கோவிந்த செட்டியார்
434) க.திம்மி செட்டியார்
435) க.வெங்கட்ராமன் செட்டியார்
436) க.சி.வெங்கட்ராமன் செட்டியார்
437) சின்னராமஞ் செட்டியார்
438) கரும்பள்ளி கரி திம்மி செட்டியார்
439) கு.சென்ன பசவன் செட்டியார்
440) க.சிக்கண்ண செட்டியார்
441) மடமனை சாமாஜி வி.எம்.திருமணஞ் செட்டி

                  இவர்கள் எல்லோரும் மற்றும் பல இடங்களிலிருந்து வந்திருந்த ஜனங்களிடமிருந்தும் கையொப்பம் வாங்கப்பட்டது.  இங்கு வந்திருந்த சகல ஜாதியராலும் உள்ளூர் ஜாதியாராலும் உள்ளூர் ஜாதியார், பெண் மக்களாலும், அண்ணன் தம்பியினாலும் மடமனை உறவின் முறையாராலும் அதிக உன்னித விமரிசையாக ராமலிங்க சவுடேஸ்வரி உற்சவத்தை நடத்தி சங்கீத மங்களப் பாடல்களும் பெரியோர்களால் ஆசீர்வாதங்களும், வித்துவான்களால் வாழ்த்துப் பாடல் பாடப்பட்டது. 

                                                                                      சுபம். சுபம்.
இந்த சாசனத்தை எழுதி வைத்தவர் பெயர்:

                    ஸ்ரீசயில பீடம் முத்தூர் சிம்ஹாசனம் மலையாண்டிபட்டிணம் மடாதிபதியாகிய தேவாங்கர் பத்தாயிரம் குலத்தாருக்கும் குலகுருவாய் விளங்கும் சுவாமிகளால் எழுதி வைக்கப்பட்டது.  சுபம்.சுபம். ராமலிங்கசுவாமி ரச்சிக்கவும், சம்பூர்ணம் கலியுக சகாப்தம் 4974 ஆங்கிரஷ வருஷம் (1873) தை மாதம் எழுதியது. முற்றிற்று.

பழைய சாசனத்தை சரியான நகல் எழுதிய காலம்:
      
                  கலியுக சகாப்தம் 5042 விக்ரம வருடம் (1941) சித்திரை மாதம் சுபயோக சுபதினத்தில் வி.எம்.டி.சாமாஜியாகிய பாலகுரு சுவாமியால் நகல் எழுதப்பட்டது. 

                                                                       சவுடேஸ்வரி உற்பத்தி:              தேவலப்ரஹ்ம ஸிஷக்திற்ஜாதா ஷுடாம்பிகா பிதாஸா தேவாங்கப்ரம் ஹனானாம் பபுவ குல தேவதா

              இதன் பொருள்: தேவாங்கனுடைய சிறு சக்தியும் சூடாம்பிகை என்ற நாமம் உள்ளவளாய் தேவாங்க பிராமணருக்கு குல தேவதையாயினால் என்பதை விவேக சிந்து என்ற கிரந்தத்தில் சொல்லப்பட்டுள்ளது. 

          கணபதியென்றிட கலங்கும் வல்வினை
          கணபதியென்றிட காலனுங் கைதொடான்
         கணபதியென்றிட கரும மாதலால்
          கணபதியல்லதோ கருமமில்லையே

          ஆறுமுகவனை அஞ்செழுத்தினை
          நாருமலல் கொடு நெஞ்சினி நினைபவள்
          கூறுமடியவர் பஞ்சபாதகம்
         பேறுபெருவரே பிஞ்சிபோ குமே

சவுடேஸ்வரி அம்மன் வரவு:உந்துதிரை நெடுங்கடல் போல்
ஒலித்தடந்த அரக்கர் வென்னிட்டாடி
வீழ முந்துபரம் பொருளிதயாம் பரத்துதித்த
தேவலனை முழுதுங் கார்க்சுக் கந்து பொருது
கடகளிரு கலங்கு கண்டீரவா வாகன
நடாத்தி வந்து திருவருள் புரிந்த சவுடநா
யகி திருத்தாள் வழுத்தல் செய்வோம்

சவுடேஸ்வரி தியானம்:
சூடாம்பிகா பகவதி ப்ராணாகாதரி
ஹந்தரி தேவாங்க ப்ரம்ம குலதேவி
ஷு பர்வ பூஜ்யே வந்தா மஹேஜ
நநீ தேவல புத்ரிகேந்தவாங்ம மாம்பாகி
ஜகதீஸ்வரி மிருத்யுவக்றாத்

இதன் பொருள்:

                               ஜகதீஸ்வரியான பகவதி பக்தரது துன்பத்தை தீர்க்கப்பட்ட தேவாங்க பிராமணருடைய குல  தேவதையான தேவலபுத்திரி என்ற சூடாம்பிகையே உன்னை வணங்குகின்றேன்.  என்னை ம்ருத்யு என்ற காலனுடைய பயத்தைத் தீர்த்துக் காப்பாற்ற வேண்டும் என்பது கருத்து.

                                                                                                    சுபம்.

இந்த சாசனத்தை அச்சிட்டவர்:
            கருவேலாங்காடு சிக்கண்ண செட்டியார் மகன்,
            சி.கருப்பஞ் செட்டியார் மகன்,
             க.பழனிச்சாமி செட்டியார் மகன்
             ப.அருணகிரி செட்டியார் (திருப்பூர்) என்பவர்.

Image: 
Categories: 
Share Share
Scroll to Top