Deprecated: Array and string offset access syntax with curly braces is deprecated in /home4/devan1ay/public_html/sites/all/modules/entity_translation/includes/translation.handler.inc on line 1685
தேவாங்க குல சித்தர் ஸ்ரீ உஜ்ஜி சுவாமிகள் | Devangaworld

 
88929 25504
 
  • Total Visitors: 3745578
  • Unique Visitors: 308197
  • Registered Users: 35949

Error message

  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Deprecated function: implode(): Passing glue string after array is deprecated. Swap the parameters in drupal_get_feeds() (line 394 of /home4/devan1ay/public_html/includes/common.inc).

தேவாங்க குல சித்தர் ஸ்ரீ உஜ்ஜி சுவாமிகள் :

 

சுமார் 165 வருடங்களுக்கு முன் அருப்புக்கோட்டையில் தேவாங்க இனத்தில் பிறந்து இல்லறத்தில் இருந்தபடியே ஆன்ம ஞானம் பெற்ற மிக பெரும் தேவாங்க சித்தர்தான் ஸ்ரீ உஜ்ஜி சுவாமிகள்.

 

 

 

ஸ்ரீ உஜ்ஜி சுவாமிகள் தேவாங்க குல தொழிலான நெசவு தொழில் செய்யும் குடும்பத்தில் பிறந்து நெசவு தொழிலை செய்து வந்தார். அவர் வாழ்ந்து வந்த காலத்தில் பெரும் சித்துகள் செய்து அப் பகுதி மக்களை வியப்படைய செய்துள்ளார்.

 

 

 ஸ்ரீ உஜ்ஜி சுவாமிகளின் சித்து விளையாட்டுகள் :

 

ஒரு முறை அப்பகுதியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட ஊர் மக்கள் உதவியுடன்  ஸ்ரீ உஜ்ஜி சுவாமிகள் தலைமை ஏற்க இரண்டு கிணறுகள் தோண்டப்பட்டன. தினமும் மாலையில் கிணறு தோண்டும் வேலை முடிந்ததும் வேலை செய்த வேலையாட்களுக்கு கொடுக்க அந்த நாளில் போதிய பணம் இல்லாமல் ஊர் மக்கள் சிரமப்பட்டனர். இந்நிலையை ஸ்ரீ உஜ்ஜி சுவாமிகளிடம் கூற தன்னிடம் பணம் இல்லாத ஸ்ரீ உஜ்ஜி சுவாமிகள் தன் தலை பாகையில் கையை விட்டு பணம் எடுத்து வேலை செய்த எல்லோர்க்கும் கொடுத்து அனுப்பினார். இதே நிலை கிணறு வெட்டி முடிக்கும் வரையிலும் தொடர்ந்தது அது அப் பகுதி மக்களுக்கு பெரும் வியப்பை அளித்தது.

 

 

மற்றொரு முறை அருப்புக்கோட்டை பகுதியில் ஊர் மக்கள் ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மன் கோவில் கட்ட முடிவெடுத்தனர். அப்பொழுது ஊர் மக்கள் அணைவரும் ஸ்ரீ உஜ்ஜி சுவாமிகளை சந்தித்து ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மன் கோவில் கட்டவிருப்பதும் அதற்காக தாங்கள் சுண்ணாம்பு கொடுத்துதவவேண்டும் என்று வேண்டினர்.

 

நம் கன்னட மொழியில் நடந்த உரையாடலின்படி.

 

" ஸ்வாமி நீவு நுறு கோட்டை சுன்ன கொடுபேக்கு "  என்று ஊர் மக்கள் கேட்க.  ஸ்வாமிகளும் அப்படியே ஆகட்டும் என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

 

பின்பொருநாளில் கோவில் பணி தொடங்கியப் பொழுது ஊர் மக்கள் அணைவரும் ஸ்ரீ உஜ்ஜி சுவாமிகளிடம்  சுண்ணாம்பு கேட்க அவரும் மூன்று கோட்டை சுண்ணாம்பு கொடுத்தார். நூறு கோட்டை சுண்ணாம்பு கொடுப்பதற்கு பதிலாக மூன்று கோட்டை சுண்ணாம்பு மட்டும் கொடுத்தை பார்த்த ஊர் மக்கள் அவரிடம்.

 

" ஸ்வாமி நீவு நுறு கோட்டை சுன்ன கொடுதேனேந்து தானே ஏளிரி ஈக மூறு கோட்டை சுன்ன மட்டுத்தா கொட்டுதேரே " என்று கேட்க

 

ஸ்வாமிகள்

 

"அந்தியே மூறுந்து எளிநா இல்ல நூருந்து எளிநா" என்று கேட்க

 

ஊர் மக்கள் அணைவரும் அவர் நூறு கோட்டை சுண்ணாம்பு கொடுக்க ஒப்புக்கொண்டதாக சொல்ல. அப்படியே ஆகட்டும் என்று சொல்லி அன்பிவைத்தார்.

 

 

ஸ்வாமிகள் தாமாகவே ஒரு தனி ஆளைய்  ஒரு சுண்ணாம்புக் காளவாய் அமைத்து நூறு கோட்டை சுண்ணாம்பை தயாரித்து ஸ்ரீ சவுடேஸ்வரி கோவில் கட்ட கொடுத்தார்.

 

 

சிலகாலங்களில் அவர் இறை நினைவிலும் பக்தியிலும் ஆழ்ந்து இருக்க தொடங்கிவிட்டார். அதனால் அவர் நெசவு தொழில் செய்வதில் ஆர்வம் குறைய ஆரம்பித்து. அதனால் அவர் வீட்டில் வறுமை ஏற்பட்டலானது. ஸ்வாமிகளின் துணைவியார் ஸ்வாமிகளிடம் நீங்கள் இப்படியே இறைவன் இறைவன் என்று சொல்லிக்கொண்டே இருந்துவிட்டால் உணவிற்கு என்ன செய்வது என்று கேட்க. ஸ்வாமிகள் நமக்கு தேவையான உணவு இறைவன் கொடுப்பான் என்று சொன்னார். அதற்கு அம்மையார் கோபமாக இப்பொழுது சாப்பிட உணவு சமைக்க வீட்டில் பொருளேதும் இல்லை என்று சொனார்.

 

அதை கேட்ட  ஸ்வாமிகள் அம்மையாரிடம் உணவு தயாரித்து தயாராகத்தானே உள்ளது என்று கேட்டார். அதற்கு அம்மையார் நான் இன்று உணவு சமைக்க வில்லை வீட்டில் உணவு சமைக்க  பொருளேதும் இல்லை என்று சொல்ல. ஸ்வாமிகள் அம்மையாரை ஒருமுறை சமையல் அறை சென்று பார்த்துவிட்டு வந்து சொல் என்றார்.

 

 

அம்மையாரும் சமையல் அறை சென்று பார்க்க அங்கு அரு சுவை உணவுகளும் சுட சுட தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்ததை பார்த்து வியப்படைந்தார்.

 

ஸ்வாமிகளின் பத்தியையும் இறைவனின் அருளையும் அம்மையாரும் உணர்ந்து கொண்டார்.

 

ஸ்ரீ உஜ்ஜிசுவாமிகள் விஷஜந்துகளிடம் மிகவும் பிரியம் காட்டி வந்தார்.

 

அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரதில் ஸ்ரீ உஜ்ஜி சுவாமி கோயில் தெருவில் அவரின் ஜீவ சமாதி அமைந்துள்ளது. இன்றளவும் அவரை நம்பி வரும் பக்தர்களுக்கு அவர்களின் கஷ்டங்களை தீர்த்துவைத்தும் அவர்கள் வேண்டும் செல்வங்களை அளித்தும் அருள் பாலித்து வருகிறார். அவர் ஜீவ சமாதி அடைந்து ஏற தள நூறாண்டுகள் ஆகிவிட்டன.

 

 

தேவாங்க சமூகத்தை சேர்ந்த நாமும் நம் தேவாங்க குல சித்தர் ஸ்ரீ உஜ்ஜி சுவாமி கோயிலுக்கு சென்று அவரை வழிபட்டு அவரின் அருளை பெற்று நாமும், நம் குடும்பமும், நம் உறவினர்களும் ,

 நம் நண்பர்களும், தாயதிகளும், தேவாங்க குலமும் சிறக்க வழி செய்வோம்.

 

 

கட்டுரை : செந்தில்குமார் கிருஷ்ணஸ்வாமி.

Image: 
Categories: 
Share Share
Scroll to Top